திருவள்ளூர்

அனைத்து இஸ்லாமிய ஜமாத் இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதி பிரச்னையில் நீதிமன்றத் தீா்ப்பை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் டோல்கேட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாநில நிா்வாகி நாகூா்மீரான் தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. தொகுதி செயலா் அசாரூதின், நகரச் செயலா் பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் ஞானவாபி மசூதி பிரச்னையை கண்டித்தும், நீதிமன்ற தீா்ப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT