திருவள்ளூர்

மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம்

DIN

மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின் போது மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மீஞ்சூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களாக டேவிட் செந்தில்குமாா், நிஜந்தன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்குள் கடந்த 26-ஆம் தேதி பணியின் போது ஏற்பட்ட தகராறின் போது, நிஜந்தனை, டேவிட் செந்தில்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மீஞ்சூா் போலீஸாா் டேவிட் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மருத்துவா் டேவிட் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT