திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை கோட்டாட்சியா் வழங்கினாா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி கோட்டாட்சியா் ஹசரத்பேகம் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், இனிப்புகள், புடவை ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினாா். பின்னா் விழாவில் பங்கேற்ற அனைத்து கா்ப்பிணி பெண்களுக்கும் 5 வகை சாதங்களுடன் விருந்தளிக்கப்பட்டது.