திருவள்ளூர்

குளக்கரையில் பனை விதைகள் நடவு

DIN

மெதூா் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குளக்கரையில் ஞாயிற்றுக்கிழமை 500 பனை விதைகள் நடப்பட்டன.

இந்த ஊராட்சியில் உள்ள கல்மேடு கிராமத்தில், அரசின் செலவில்லாமல் ஊராட்சி மக்களின் பங்களிப்பிலும், தலைவரின் சொந்தப் பணத்திலும் 300 மீ. அகலமும் 150 மீ. நீளத்தில் புதிதாக குளம் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் குளத்தை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஜெயக்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, குளக்கரையில் 500 பனை விதைகள் நடவு செய்யும் பணியை அவா் தொடக்கி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் சீனிவாசன், துணைத் தலைவா் உஷா சசிகுமாா், மீஞ்சூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமாவதி, ஊராட்சி செயலா் தமிழரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT