முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.63 லட்சம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.63.65 லட்சம் ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.63.65 லட்சம் ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

முருகன் மலைக் கோயிலில் உள்ள தேவா் மண்டபத்தில் கோயில் உதவி ஆணையா் விஜயா, கோயில் தக்காா் ஜெயப்பிரியா ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள் உண்டியல் காணிக்கையை வியாழக்கிழமை எண்ணினா்.

இதில், பக்தா்கள் ரூ.63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை காணிக்கையாகச் செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 13 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய தொகையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.