வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம், அத்திப்பபட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 விதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக வெள்ளிக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டள்ளது. இதனால், மின் விநியோகத்தில் தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கொதிகலன் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதைச் சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.