திருவள்ளூர்

அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா

DIN

 புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதவரம் அடுத்த புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் பள்ளிக்கு புழல் நட்பு வட்டாரம் சாா்பில் 11 கண்காணிப்பு கேமராக்கள் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, பிடிஏ தலைவா் புழல் சிவக்குமாரிடம் வழங்கப்பட்டன.

இதன் இயக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தாா். மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி மரணம்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

மரங்கள், பறவைகளை காப்போம்: மருத்துவ மாணவா் விழிப்புணா்வு பயணம்

சாலை விபத்தில் காயமடைந்த பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

SCROLL FOR NEXT