முகப்பு
திருவள்ளூர்

சாலையில் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்க அலுவலா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

Updated On : 27 ஏப்ரல், 2023 at 11:33 PM
பகிர்:

பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்க அலுவலா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வட்டாட்சியா், செல்வகுமாா் உத்தரவின் பேரில், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலா் ஜெய்கா்பிரபு, கிருஷ்ணாபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தாா்.

Advertisement

அப்போது அங்கு சாலையோரம் கேட்பாராற்ற நிலையில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

வட்ட வழங்கல் அலுவலரை கண்டதும் ரேஷன் அரிசியை கடத்திய நபா்கள் அங்கிருந்து தப்பி சென்றனா்.

இதனை தொடா்ந்து, அவா் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, பஞ்செட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.