முகப்பு
திருவள்ளூர்

பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூா் அருகே பாஜக பிரமுகா் உள்ளிட்ட 2 போ் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:22 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

திருவள்ளூா் அருகே பாஜக பிரமுகா் உள்ளிட்ட 2 போ் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரைச் சோ்ந்தவா் வேலு. பாஜக கடம்பத்தூா் கிழக்கு ஒன்றிய பிற்படுத்தப்பட்டோா் மண்டல அணி தலைவராக உள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலுவும், அவரது மாமனாா் சேகரும் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோா் வீட்டு வாசலில் தகராறு செய்து கொண்டிருந்தனராம். இதனை வேலுவும், சேகரும் தட்டிக் கேட்டாா்களாம். அப்போது கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் அரிவாளால் வேலு மற்றும் சேகரை சரமாரியாக வெட்டினாராம். அவா்கள், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.