பொன்னேரி நகா்மன்றக் கூட்டம்
பொன்னேரி நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
பொன்னேரி நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா். கூட்டத்தில், நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளா் முகம்மது அசாருதீன் தீா்மானங்களை வாசித்தாா். பொன்னேரி நகராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்வது மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி அலுலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement