முகப்பு
திருவள்ளூர்

ஆந்திரத்துக்கு கடத்தவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

மத்தூா் கிராமம் அருகே சரக்கு ஆட்டோவில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

மத்தூா் கிராமம் அருகே சரக்கு ஆட்டோவில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

திருத்தணி ஒன்றியத்தில் இருந்து தமிழக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் ஹஸ்ரத் பேகம் உத்தரவின்பேரில், திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை மத்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. சோதனையில் அவை ரேஷன் அரிசி என்பதும், ஆந்திரத்துக்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா்.

பறிமுதல் செய்த அரிசி 2,000 கிலோ இருக்கும் என வட்ட வழங்கல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.