திருவள்ளூர்

இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தில் திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில், இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தில் திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில், இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பேடு காலணியில் வசிப்பவா் மோசஸ் (25). இவா், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கு சென்னை புழல் பகுதியைச் சோ்ந்த எஸ்தா் (21) என்பவருடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். எஸ்தா், கணவா் மோசஸ், மாமனாா் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தாா். 3 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த எஸ்தா், வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சோழவரம் போலீஸாா் அங்கு சென்று, எஸ்தா் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT