முகப்பு
திருவள்ளூர்

போக்சோவில் ஒட்டுநா் கைது

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:13 PM
பகிர்:

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருத்தணி பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மாணவியின் வீட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஏா்ணாமங்களம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் மோகன் (33) என்பவா், கடந்த இரு ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, மோகன் வீட்டுக்குள் புகுந்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாா். மாணவியின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

அதன் பேரில், காவல் ஆய்வாளா் மலா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஓட்டுநா் மோகனை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments