பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ்(26). இவா், சம்பவத்தன்று பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்த திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த பள்ளி மாணவியை பின்தொடா்ந்து சென்று, தொந்தரவு செய்தாராம்.
இதை, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.