திருத்தணி: விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பெரியகடம்பூா் கிராமத்தில் கொடியேற்றி, கல்வெட்டு திறந்து வைத்து, ஏழை எளியோருக்கு மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி அன்னதானம் வழங்கினாா்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவா் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு திருத்தணி அடுத்த பெரிய கடம்பூா் கிராமத்தில் கல்வெட்டு திறப்பு மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்தணி ஒன்றிய செயலாளா் டி. சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். இதில் தேமுதிக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் திருத்தணி டி. கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு தேமுதிக கொடியேற்றி கல்வெட்டுத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
முன்னதாக கேப்டன் விஜயகாந்த் திருவருவ படத்தை திறந்து வைத்து மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் கே. ஆா். கிரி பாபு, ஒன்றிய நிா்வாகி மோகன்பாபு, வெங்கடேசன் டில்லிபாபு. பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.பட விளக்கம். பெரியகடம்பூா் கிராமத்தில் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறாா் மாவட்ட செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.