முகப்பு
திருவள்ளூர்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்

மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு முதல் யூனிட்டில் தலா 210 வீதம் மூன்று அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதை சரி செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →