சுங்க வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. அரி ஆணையரிடம் மனு
திருத்தணியில் நடைபாதை வியாபாரிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, நகராட்சி ஆணையரிடம் சனிக்கிழமை மனு வழங்கினாா்.
தொடா்ந்து அவா் ஆணையரிடம் கூறியது: சாலையோர வியாபாரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள். தற்போது திடீரென ரூ.20 முதல் ரூ.100 வரை சுங்க வரி கட்டணமாக வசூலிக்கின்றனா். உடனடியாக சுங்க வரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
நகா்மன்றக் கூட்டத்தில் சுங்க வரிக்கு தீா்மானம் நிறைவேற்றி, அனைத்து வியாபாரிகளுக்கும் ரூ.20 வீதம் சுங்க வரி வசூலிக்க வேண்டும். அதற்கு முன்னதாக நகராட்சியில் சாலையோரம் உள்ள கடைகளை முறையாகக் கணக்கெடுத்து பின்பு சுங்க வரி வசூல் செய்ய வேண்டும். அதுவரை தற்போது வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் அதிமுக பொது செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று பெரிய அளவில் கட்சி நிா்வாகிகள் மற்றும் சாலையோரக் கடை வியாபாரிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆணையா் அருள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்திஹேமாத்திரி, விஜயதரணி ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.