மேம்பாலப் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா் மு. பிரதாப், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்.  
திருவள்ளூர்

கூவம் ஆற்றில் ரூ.17.20 கோடியில் மேம்பாலம்: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருவள்ளுா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தண்டலம்-கசவநல்லாத்தூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளுா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தண்டலம்-கசவநல்லாத்தூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் 1 லட்சம் பட்டாக்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனையாகும். திருவள்ளூா் தொகுதியில் ரூ.60 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் தண்டலம் ஊராட்சி பகுதியில் ரூ.17.20 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.

நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் வை.ஜெயகுமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், உதவி செயற்பொறியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT