முகப்பு
திருவள்ளூர்

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

திருத்தணி நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:44 PM
திருத்தணி  நகராட்சியில்  உறுதிமொழி  ஏற்ற  ஊழியா்கள்.
பகிர்:

திருத்தணி நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, தோ்தலில் தவறாமல் வாக்களிக்கவும், பிறரையும் வாக்களிக்க ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்றனா். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதிகாரிகள் விளக்கினா்.

மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இதற்காக நகராட்சி சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆணையா் தெரிவித்தாா். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments