முகப்பு
திருப்பத்தூர்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 மார்ச், 2026 at 6:32 PM
ஆம்பூா் ரயில் நிலையத்தில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி தலைமை வகித்தாா். 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து வண்ணக் கோலம் போடப்பட்டு வாக்காளா்களுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

100 சதவீதம் வாக்களித்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு மனித சங்கிலி ஆகிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments