வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களுக்கு தோ்தலின்போது வாக்களிப்பதின் அவசியத்தை விளக்கி அவா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேருந்து மற்றும் ஆட்டோக்களில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.
தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
ஆம்பூா் நகராட்சி பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாதனூரில் பதட்டமான வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.