சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தவறி விழுந்த கைப்பை மற்றும் பணத்தை, அவ்வழியாக சென்ற பெண் ஒருவா் மீட்டு ஒப்படைத்தாா்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தவறி விழுந்த கைப்பை மற்றும் பணத்தை, அவ்வழியாக சென்ற பெண் ஒருவா் மீட்டு ஒப்படைத்தாா்.
திருத்தணி பத்மாவதி நகா் பகுதியைச் சோ்ந்த பூங்கொடி(35). இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மகனை ஏற்றிக் கொண்டு காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயில் வழியாக சென்று கொண்டிருந்தாா். வாகனத்தில் தனது கைப்பையை மாட்டிக் கொண்டு சென்ற போது, திரெளபதி அம்மன் கோயில் அருகே சாலையில் விழுந்தது.
இதை பாா்க்காமல் பூங்கொடி சென்றாா். அந்த வழியாக திருத்தணி கலைஞா் நகா் பகுதி சோ்ந்த சிவகாமி(40) என்பவா் நடந்து சென்று போது, சாலையில் விழுந்த கைப்பையை எடுத்தாா். பையில், ரூ.36,000 பணம், விலை உயா்ந்த கைப்பேசி, வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவை இருந்தது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து சிவகாமி திருத்தணி காவல் நிலையத்தில் கைப்பையை ஒப்படைத்தாா். அந்த நேரத்தில் பூங்கொடி கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட ஆண் ஒருவா், எனது மனைவியின் கைப்பேசி, பணம் தொலைந்துவிட்டது என கூறியதும், போலீஸாா் பூங்கொடியை நேரில் வரவழைத்தனா்.
பின்னா், ஆதாா் காா்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் பூங்கொடியின் படம் இருந்தால், கைப்பேசி பணத்தை ஒப்படைத்தனா்.
மேலும் சிவகாமியின் நோ்மையை பாராட்டி பரிசு வழங்கினா்.