வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் 
திருவள்ளூர்

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், 6 அலகுகளில் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

அவா்கள் வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளா்கள் முழக்கம் எழுப்பினா்.

மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 30,000 வழங்கிட வேண்டும், மின் வாரியம் நேரடியாக அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் சுப்பிரமணியன் திடீா் ஆய்வு

புதுமணப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் போலீஸாா் விசாரணை

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

SCROLL FOR NEXT