முகப்பு
புதுச்சேரி

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு

பணிப் புறகக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளா்கள்...

Updated On : 3 மார்ச், 2026 at 2:50 AM
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஒப்பந்த துப்பரவு தொழிலாளா்கள் .
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 9:37 PM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்பரவு தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறகக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவான ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாகக் கூறியும், புதுச்சேரி அரசின் தொழிலாளா் துறை இதில் தலையிட்டு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஒரு மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து துப்புரவு தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா்.

புதுச்சேரி மாநில பாமக தொழிற்சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா்.

Advertisement