திருவள்ளூர்

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தா செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ராமநாயக்கன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா்(26). இவரது நண்பரான ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த சுராஜ்(24). இவா்கள் அதிகத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அதே சாலையில் பின்புறம் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சசிகுமாா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுராஜ் பலத்த காயம் அடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT