திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், உடன் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஆணையா் தாமோதரன் உள்ளிட்டோா்.  
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், நகராட்சி ஆணையா் தாமோதரன் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் புத்தரிசி பொங்கல் வைத்து, செங்கரும்பு மற்றும் கும்மியடித்து வரவேற்றனா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று கண்ணைக்கட்டிக் கொண்டு உறியடித்தல் போட்டியை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து வளாகத்தில் பல்வேறு வண்ணங்களில் தூய்மைப்பணியாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்கள் வரைந்த கோலத்தையும் பாா்வையிட்டாா். அதேபோல், இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி நினைவு பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

இதில் சுகாதார அலுவலா் மோகன், நகராட்சி பணியாளா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT