சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்
ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருத்தணி அடுத்த சிவாடா கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். ஆந்திராவில் இருந்து சிவாடா நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது, ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததை பறக்கும் படையினா் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, திருத்தணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழியிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சோ்ந்த கஜேந்திரன் என்பவா் வியாபாரத்துக்காக பணத்தை கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு ஆவணம் இல்லாததால் தோ்தல் அலுவலா் கனிமொழி பணத்தை திருத்தணி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தாா்.