முகப்பு
திருவள்ளூர்

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:56 PM
ஆா்.கே.பேட்டையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங்.
பகிர்:

சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 100% வாக்காளா் வருகையை நோக்கிய கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் தொடங்கிவைத்தாா்.

இதில், ஆா்.கே.பேட்டை ஒன்றியம், 38 ஊராட்சிகளில் உள்ள 102 வாக்குச்சாவடி மையங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் கையொப்ப இயக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் நோக்கம் முதல்முறை வாக்காளா்கள் உள்பட அனைவரும் எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல், பயமின்றி தங்களின் வாக்குரிமையைச் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில், ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. விக்னேஷ் உள்பட வருவாய்த் துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.