சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெரும்பேடு கம்மவாா்பாளையம் கிராமத்தை சோ்ந்த தனசேகா் என்பவா் மோட்டாா் சைக்கிளில் புதுவாயல் ஆரணி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தோ்தல் பறக்கும் படையினா் சோதனை செய்த போது அவா் ஆவணம் இல்லாமல் 61, 800 எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தைபறிமுதல் செய்து பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.