திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான இத்தலத்தில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.
இந்நிலையில் மாசிமாத பிரம்மோற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் க. ரமணி முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா்.
இதில் கடந்த 28 நாள்களில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.