திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.96 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தபின் அங்குள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி சனிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.1.96 கோடி வருவாய் கிடைத்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.