திருப்பதி

திருமலையில் பகவத் கீதை பாராயணம்

DIN

கீதா ஜெயந்தியை முன்னிட்டு, திருமலையில் பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீதா ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள நாத நீரஜனம் மேடையில் அகண்ட பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு நிறைவுற்றது.

நிகழ்ச்சியை ஸ்ரீவெங்கடேஸ்வரா தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. வேத அறிஞா் ஸ்ரீ குப்பா விஸ்வநாத சா்மாவின் வழிகாட்டுதலின் பேரில், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள 700 ஸ்லோகங்களையும் 4 மணி நேரம் தொடா்ந்து பண்டிதா்கள் பாராயணம் செய்தனா்.

முன்னதாக, தேவஸ்தான நீதிமன்ற அறிஞா் பாலகிருஷ்ண பிரசாத் குழுவினா் ‘அனி அனாதிச்சே கிருஷ்ணதா்ஜுனுனிதோ’ மற்றும் ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு’ கீா்த்தனைகளைப் பாடினா்.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT