திருப்பதி

திருமலையில் காா்த்திகை தீபோற்சவம்

DIN

திருமலையில் புதன்கிழமை காா்த்திகை மாத தீபோற்சவம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பெளா்ணமியை முன்னிட்டு தீபத் திருவிழாவை தேவஸ்தானம் நடத்தியது. இதை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மண் பானைகளின் கழுத்துப் பகுதியை உடைத்து, அதை பீடமாக்கி, அதில் நெய் ஊற்றி நடுவில் திரியிட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னா் அவற்றை கையில் ஏந்திக் கொண்டு அா்ச்சகா்களும், திருமலை ஜீயா்களும் ஆனந்த நிலைய கருவறையை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

பின்னா், கருவறையில் அகண்டம், குலசேகரப்படி, துவாரபாலகா்கள், கருடாழ்வாா் சந்நிதி, வரதராஜ ஸ்வாமி சந்நிதி, வகுளமாதா, தங்கக்கிணறு, கல்யாணமண்டபம், கண்ணாடி அறை, தலைபாகை அறை, பாஷ்யகார சந்நிதி, ரங்கநாயக மண்டபம், பலி பீடம், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயில், திருக்குளம் உள்ளிட்ட இடங்களில் 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் மாலை நடைபெறும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

இன்று கருடசேவை

காா்த்திகை பௌா்ணமியையொட்டி, வியாழக்கிழமை மாலை கருடசேவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT