திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது!
திருமலை வனப் பகுதியில் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
திருப்பதி: திருமலை வனப் பகுதியில் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர், சடலமாக அந்த சிறுமி மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மதுரை எய்ம்ஸ்: கட்டுமானத்துக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு!
இதில், திங்கள்கிழமை ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில், இன்று இரண்டாவதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தைகள் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி வழங்கும் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.