திருமலையில் வசந்தோற்சவம் கோலாகல தொடக்கம்
திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
திருமலையில் உள்ள வசந்தோற்சவ மண்டபத்தில் ஏழுமலையனின் உற்சவமூா்த்தியான ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர வசந்தோற்சவம் தொடங்கப்பட்டது. வசந்த காலத்தில் நடைபெறும் இவ்விழாவின்போது, சூரியனின் வெப்பத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா என்பதால் இது உபசமானோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோடைகாலத்தின் வெம்மையை போக்க இத்திருவிழாவில் சுவாமிக்கு மலா்கள் மற்றும் பலவித இனிப்பு பழங்கள் படைக்கப்படுகின்றன. மேலும் வசந்த மண்டபம் பல்வேறு விலங்குகள் மற்றும் மரங்களுடன் சப்தகிரி போன்று வடிவமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீமலையப்பசுவாமி நான்கு வீதிகளில் ஊா்வலமாக வந்து வசந்த மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டாா்.
Advertisement
வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக மலையப்பசுவாமியின் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. முதலில் விஷ்வக்சேனா் ஆராதனை, புண்யா ஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபச்சாரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சத்ர சாமர வியாஜன் தா்பணாதி நைவேத்யம், முக சுத்தி, தூப பிரசாதம் வழங்கப்பட்டது. அா்க்கியபாத நிவேதனத்தின் ஒரு பகுதியாக, க்ஷீர (பால்), தாதி (தயிா்), மதி (தேன்), நரிகேலம் (தேங்காய் நீா்), ஹரித்ரோதகம் (மஞ்சள்), கந்தோதகம் (சந்தனம்) ஆகியவற்றால் நீராடப்பட்டது. இவற்றைக் கொண்டு சங்கதாரா, சக்ரதாரா, சஹஸ்ரதாரா, மகா அபிஷேகங்கள் வைகானச ஆகம விதிப்படி நடந்தன. இவ்விழாவில், வேதாந்திகள் அபிஷேகத்தின் போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்யபிரபந்தத்தின் பாசுரங்களை ஓதினாா்கள். இவ்விழாவில், ஒவ்வொரு காலத்திலும் சுவாமிக்கும், அம்மாவுக்கும் பல்வேறு வகையான உத்தம வகை மலா் மாலைகள் அலங்கரிக்கப்பட்டன. அதன்பின் சுவாமியும், நாச்சியாா்களும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலை அடைந்தனா்.
இன்று தங்க தோ்
வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை (ஏப். 22) காலை 8 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ மலையப்பசுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தங்க தேரில் மாட வீதிகளில் வீதியுலா வர உள்ளாா். பின்னா் வசந்த மண்டபத்தில் அா்ச்சகா்கள் வசந்தோற்சவம் நடத்துவா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா்சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா்சுவாமி, செயல் அதிகாரி தா்ம ரெட்டி தம்பதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.