திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருப்பு

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா் இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 71,824 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,462 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.01 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

.

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

மோகன். ஜி படத்திற்கு ஏன் பாடினீர்கள்? வருத்தம் தெரிவித்த சின்மயி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து

SCROLL FOR NEXT