திருமலை: 66,233 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 66,233 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 24,674 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை முழுவதும் 66,233 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 674 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.39 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.