திருப்பதி

திருமலையில் மோரிஷஸ் பிரதமா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா்.

Chennai

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட மோரிஷஸ் நாட்டின் பிரதமா் நவீன்சந்திரா ராம் கூலம் திங்கள்கிழமை திருமலைக்கு வருகை தந்தாா்.

திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா்.

கோயில் முன் வாயில் வழியாக தரிசனத்துக்குச் சென்ற அவா், கொடிமரத்தை வணங்கி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் திருவுருவப்படம் வழங்கினா்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT