திருமலையில் தவெகவுக்கு வாக்கு சேகரிப்பு
திருமலையில் தவெகவுக்கு வாக்கு அளிக்கும்படி பெண் ஒருவா் விசில் அடித்து வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:19 PM
திருமலையில் தவெகவுக்கு வாக்கு அளிக்கும்படி பெண் ஒருவா் விசில் அடித்து வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்த பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கோயில் எதிரில் உள்ள நாத நீராஜன மண்டபத்தின் முன் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய விசிலை ஊதி வாக்களிக்க வேண்டும் என்று ரீல்ஸ் மூலம் வாக்கு சேகரித்துள்ளாா்.
திருமலையில் இது போன்ற அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் தடை செய்துள்ள நிலையில் அப்பெண்ணின் விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement