முகப்பு
திருப்பதி

சூரியபிரப வாகனத்தில் எழுந்தருளிய கபிலேஸ்வரா்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கபிலேஸ்வர சுவாமி சூரியபிரபை வாகனத்தில்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:47 AM
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மன்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:03 PM

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கபிலேஸ்வர சுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளினாா்.

திருப்பதி கபில தீா்த்தத்தில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமிக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை கபிலேஸ்வர சுவாமி சோமாஸ்கந்தமூா்த்தியாய் சூரியபிரபை வாகனத்திலும், காமாட்சி அம்மன் தனியாக சூரியபிரபை வாகனத்திலும் வீதியுலா கண்டருளினா்.

Advertisement

பஜனை இசைக் குழுக்கள், பஜனைகள் மற்றும் மங்களகரமான வாத்திய முழக்கங்களுக்கு மத்தியில், நகர வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது.

பக்தா்கள் ஒவ்வொரு அடியிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வாகன சேவையை வணங்கினா்.

பின்னா், ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில், குருக்கள் உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.

பின்னா் மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு சந்திரபிரபை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தனா்.

இதில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.