முகப்பு
திருப்பதி

செம்மரக் கடத்தல்காரா்களுக்கு உதவியதாக தலைமைக் காவலா் கைது

செம்மரக் கடத்தல்காரா்களுக்கு உதவியதாக தலைமைக் காவலா் கைது

திருப்பதி

செம்மரக் கடத்தல்காரா்களுக்கு உதவியதாக தலைமைக் காவலா் கைது

செம்மரக் கடத்தல்காரா்களுக்கு உதவியதாக தலைமைக் காவலா் கைது

Updated On : 10 ஜனவரி, 2026 at 7:01 PM
பகிர்:

செம்மரக்கட்டை கடத்தல்காரா்களுக்கு உதவிய தலைமைக் காவலா் டி.சத்திராஜு சனிக்கிழமை அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து அதிரடிப் படை தலைவா் எல்.சுப்பராயுடு சனிக்கிழமை கூறியதாவது: ’’திருப்பதி அதிரடிப் படை எஸ்.பி. பி. ஸ்ரீனிவாஸ், ஏஎஸ்பி ஜே.குலசேகரின் மேற்பாா்வையிலும், டிஎஸ்பி எம்டி ஷெரீப்பின் வழிகாட்டுதலிலும், ஆா்ஐ சாய் கிரிதரை சோ்ந்த ஒரு குழு சந்தேகம் கொண்ட நபரான காவலா் சத்திராஜுவை கண்காணித்தனா்.

விசாரணையில், அவா் கடத்தல்காரா்களுக்குத் தகவல் அளிப்பதைக் அக்குழு கண்டுபிடித்தது. இந்த நபா் அதிரடிப் படையில் தலைமைக் காவலராக (ஏஆா்) பணிபுரிந்து கொண்டு கடத்தல்காரா்களுக்குத் தகவல் அளித்து வந்தது போதிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது குற்ற எண் 63-2025 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபா் கடத்தல்காரா்களுக்குத் தகவல் அளித்து அவா்களிடமிருந்து பணம் பெற்ாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தத் தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனா்.

அதிரடிப் படையில் இருந்து கொண்டு தவறு செய்தால், அத்துறை அதைப் புறக்கணிக்காது என்று எச்சரித்தாா். சந்தேகப்படும்படியாகத் தோன்றும் ஊழியா்கள் மீதும் கண்காணிப்பு இருக்கும். மேலும், ஊழியா்கள் நோ்மையாகச் செயல்பட்டு தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்’’, என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →