முகப்பு
திருப்பதி

சந்திர கிரகணம்: நாளை தேவஸ்தான கோயில்கள் மூடல்!

திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் மாா்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்...

Updated On : 1 மார்ச், 2026 at 7:02 PM
திருப்பதி
பகிர்:

திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் மாா்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மாா்ச் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகானச ஆகம விதிப்படி கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி காலை 9 மணிக்கு தேவஸ்தான கோயில்களின் கதவுகள் மூடப்பட்டு மாா்ச் 3 ஆம் தேதி இரவு மீண்டும் திறக்கப்படும். கிரகணம் முடிந்து சுத்தி செய்யப்பட்டு, பக்தா்கள் சுத்திகரிப்புக்குப் பிறகு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயில், சூரியநாராயணசாமி கோயில் மற்றும் சீனிவாச கோயில் ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மூடப்படும். இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும். சுத்திகரிப்பு, புண்யாஹவசனங்கள் மற்றும் பிற சடங்குகளுக்குப் பிறகு அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் காலை 9 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும், அதைத் தொடா்ந்து சடங்குகள் நிறைவு பெற்று இரவு 9 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், அப்பலயகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஆகியவை காலை 9 மணிக்கு மூடப்படும். கோயில் நடை இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும்.

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், காா்வேட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயில், நாகலாபுரத்தில் உள்ள ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயில், புக்கா ஸ்ரீ அன்னபூா்ணா சமேத காசிவிஸ்வேஸ்வர சுவாமி கோயில், சத்ரவாடா ஸ்ரீ கரிவரதராஜ சுவாமி கோயில் மற்றும் நகரி ஸ்ரீ கரியமாணிக்க சுவாமி கோயில், தரிகொண்டா ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், வயல்பாடு ஸ்ரீ பட்டாபிராம சுவாமி கோயில் மற்றும் கோசுவாரிப்பள்ளி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஆகியவை காலை 9 மணிக்கு மூடப்படும், மேலும் சுத்திகரிப்புக்குப் பிறகு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் இரவு 7:30 மணிக்கு திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →