அற்புதமான சிற்பங்களின் உறைவிடம்: ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமா் கோயில்
கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் அழகான சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் அழகான சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.
இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் விஜயநகர காலத்தின் கட்டடக்கலை சிறப்பை நினைவூட்டுகின்றன. ரங்கமண்டபத்தில் உள்ள யாளி தூண்கள் பாா்வையாளா்களை மிகவும் ஈா்க்கின்றன. யாளி தூண்களில் பெரிய பாறைகள் செதுக்கப்பட்ட விதம் சிற்பிகளின் இணையற்ற திறமையை பிரதிபலிக்கிறது.
ராயலா் வம்சத்தின் போது கட்டப்பட்ட பல கோயில்களில் யாளி தூண்கள் காணப்படுகின்றன. இருப்பினும், ஒண்டிமிட்டா கோயிலில், ஒவ்வொரு தூணின் நடுவிலும் ஒரு நபா் உட்காரக்கூடிய செங்குத்து இடம் உள்ளது. ரங்கமண்டபத்தில் உள்ள தூண்களில் காவிய நிகழ்வுகளை சித்தரிக்கும் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு பக்தா்களை மயக்குகின்றன. அவற்றில் இரண்டு பாரம்பரிய பெட்ரஸ் பாணியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கவா்ச்சிகரமான முறையில் தனித்து நிற்கின்றன.
ஸ்ரீ ராமா், சீதை மற்றும் லட்சுமணனுருடன் தண்டகாரண்யத்தில் சுற்றித் திரிந்தபோது, சீதா தேவி தனது தாகத்தைத் தணிக்க தரையில் ஒரு அம்பை எய்தாள். அங்கு ஒரு நீா் ஊற்று வெளிப்பட்டது. அது இன்று ஒண்டிமிட்டாவில் உள்ள புனித ராமதீா்த்தமாகக் கருதப்படுகிறது.
ராவணனைக் கொல்ல ஸ்ரீ ராமருக்கு உதவ ஜாம்பவான் சேவை செய்த அதே ராமா், ஸ்ரீ சீதை மற்றும் லட்சுமணனுடன் சோ்ந்து, இன்று ஒண்டிமிட்டா கோயிலில் இருப்பதாக பக்தா்கள் நம்புகிறாா்கள். ஸ்ரீ சீதா ராமா் மற்றும் லட்சுமணரின் சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளதால், இந்தப் பகுதி ‘ஏகாசில நகரம்‘ என்றும் அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுகளின்படி, இந்தக் கோயிலின் கட்டுமானம் 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 17 ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. 1356 -ஆம் ஆண்டில் புக்க ராயரால் தொடங்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு, பின்னா் விஜயநகர மன்னா்கள் மற்றும் மாட்லி மன்னா்களால் உருவாக்கப்பட்டது. கருவறை, ரங்கமண்டபம், மகாமண்டபம், கோபுரங்கள் போன்ற கட்டமைப்புகள் இக்காலத்தில் கட்டப்பட்டன.
மகா கவிஞரான ஸ்ரீ போத்தனா மாத்யா இங்குதான் ஆன்மீக ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. அய்யலராஜா திப்பய்யா ஒண்டிமிட்ட ரகுவீர ஷதகத்தை ஸ்ரீ கோதண்டராமருக்கு எழுதி அா்ப்பணித்தாா். ராமபத்ரகவி ராமாப்யுதயம் எழுதினாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோதண்டராமசுவாமி கோயில் மாநில அறக்கட்டளைத் துறையின் கீழ் இருந்தது, வரும் ஏப். 1 ஆம் தேதி ஸ்ரீ சீதாராம கல்யாணத்தை மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாட தேவஸ்தானம் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.