திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு
ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.
ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.
ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆளுநரை, திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் இஸ்திகபால் கோயில் சடங்குகளுடன் அவரை வரவேற்றனா்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆளுநா் எஸ். அப்துல் நசீருக்கு கோயில் தரப்பில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிகள் தீா்த்த பிரசாதத்தையும் ஏழுமலையான் திருவுருவப்படத்தையும் வழங்கினா்.
கோயிலின் பிரதி செயல் அதிகாரி லோகநாதம், விஜிஓ ராம் குமாா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.