திருவண்ணாமலை

திரும்பூண்டியில் ஆக.16-இல் மனுநீதி நாள் முகாம்

DIN

செய்யாறு வட்டம், திரும்பூண்டி கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஆக.16) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
செய்யாறு வட்டம், பழஞ்சூர், திரும்பூண்டி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் திரும்பூண்டி கிராமத்தில் திருவண்ணாமலை தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பி.குணசேகரன் தலைமையில் புதன்கிழமை காலை நடைபெறுகிறது.
முகாமின்போது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில், மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் இருந்து அலுவலர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT