திருவண்ணாமலை

மழை வேண்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

DIN

ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதியில் உள்ள நந்தீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
 ஆம்பூர் அருகே உள்ளது அரங்கல் துருகம் ஊராட்சி மத்தூர் கொல்லை. மத்தூர் கொல்லை வனப்பகுதி தேவுடு கானாற்றில் நந்தி சுனை அமைந்துள்ளது. அதன் அருகே பழங்காலத்தில் அமைக்கப்பட்ட நந்தீஸ்வரர் கோயில் உள்ளது.
 மழை வேண்டி இந்த நந்தீஸ்வரரை வழிபட்டால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம்.  அதனால் மழை வேண்டி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு சென்று நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT