பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் 71 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். இவர்களில், பி.சுபிக்ஷா 494, கெளவுசன்அப்ரின் 487, டி.ஐஸ்வர்யா, எஸ்.ஓம்பிரகாஷ்நாதம் ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளித் தாளாளர் எச்.இப்ராகிம், இயக்குநர் ரியாஷ்அகமத், முதல்வர் ஜெ.இ.சார்லஸ்எபிநேசர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.