திருவண்ணாமலை

லாரி மரத்தில் மோதியதில் வியாபாரி சாவு

DIN

தண்டராம்பட்டு அருகே சிறியரக லாரி மரத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த வெங்காய வியாபாரி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்காய வியாபாரி சிங்காரவேல் (41). இவர், கடந்த 19-ஆம் தேதி வெங்காய வியாபாரத்துக்காக சிறியரக லாரியில் புறப்பட்டார். லாரியை அவரே ஓட்டிச் சென்றார். தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சிங்காரவேல் கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT