திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழா: டாஸ்மாக் கடைகள் 10 நாள்களுக்கு மூடல்

DIN

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நகரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை 10 நாள்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் மதுக் கடைகள், வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை 10 நாள்கள் மூடப்படவிருக்கின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் மதுக் கடை எண் 9269, தேனிமலையில் உள்ள மதுக் கடை எண் 9257 ஆகியவை 10 நாள்களும் மூடி வைக்கப்பட வேண்டும்; நகரில் வேறு எங்கும் மதுபானங்கள் விற்கக் கூடாது. எங்காவது மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT