திருவண்ணாமலை

சேலையில் தீப்பற்றியதில் பெண் சாவு

DIN

செய்யாறு அருகே சேலையில் தீப்பற்றி சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறு அருகே உள்ள பாராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி இளங்கோ. இவரது மனைவி மாலதி (29).
 இவர், கடந்த 6-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, சேலையில் தீ பிடித்துக் கொண்டதில் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை உடனடியாக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  அவர்,  ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து மாலதியின் தம்பி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு, செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT